சென்னை மாநகர குற்றவியல் தற்காலிக வழக்கறிஞராக தேவராஜன் நியமனம்

சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞராக ஜி.தேவராஜனை தற்காலிகமாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர குற்றவியல் தற்காலிக வழக்கறிஞராக தேவராஜன் நியமனம்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகினர். நிரந்தர அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தமிழ்நாடு அரசு துவங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்காலிக அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்து வந்த ஜெய்சங்கர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு பதில் ஜி. தேவராஜன், தற்காலிக அடிப்படையில் நியமித்து, தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.