சென்னை திடீர் மழைக்கு இது தான் காரணம்....புவியரசன் விளக்கம்...!

கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்பிற்கு வந்து சென்றதே சென்னை மழைக்கு காரணம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திடீர் மழைக்கு இது தான் காரணம்....புவியரசன் விளக்கம்...!

வடகிழக்கு பருவமழை மற்றும் வானிலை நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் புவியரசன், தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும் பெய்யும் என்றார்.

டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்,  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் என தெரிவித்தார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில்  அதிகனமழையாக சென்னை டிஜிபி அலுவலகம்  24 செ.மீ ஆவடி (திருவள்ளூர்) 23, எம்ஆர்சி நகர் (சென்னை) 21 செ. மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

நேற்றைய மழை குறித்த விளக்கமளித்த அவர்,கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலபரப்பிற்கு வந்து சென்றாதல் அறிவிப்புகள் மாறும், அதற்கு ஏற்ப அறிவிப்புகள் மாற்றி வழங்கப்படும் என்றும் நேற்று பெய்த மழைக்கும் மேக வெடிப்புக்கும்(cloud burst) தொடர்பில்லை என்றார்.

அந்தமான் மற்றும் தமிழகம் இடைப்பட்ட இடத்தில் சென்னை மற்றும் அந்தமானில் மட்டும் தான் கடற்பரப்பில் தரவுகள் பெறப்படுகிறதாக கூறிய அவர் இது போக நமது மற்றும் அண்டை நாடுகளின் செயற்கோள் உதவியுடன் தான் அறிவிப்புகள் வழங்கப்படுகிறது.

ரேடார் உதவியுடன் மேகம் உருவாகும் இடம் அதன் வளர்ச்சி நகர்வுகளை மட்டுமே வழங்க முடிகிறது, காரைக்கால் ரேடார் உதவியுடனே தற்போது இவை அறிவிக்கப்பட்டு வருகிறது, மேலும் துல்லியமாக வழங்க நவீன இயந்திரங்கள் தேவைப்படுவதாக கூறினார். இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற அவர் வடகிழக்கு பருவ காற்று இன்னும் தமிழக பகுதிகளை நோக்கி வீசுவதால் அவ்வப்போது ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.