மூன்று வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு....

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மூன்று வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு....

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மல்லிகை நகர் பகுதியிலுள்ள ஒரே விதியை சேர்ந்தவர்கள், ஸ்ரீதர், ஐய்யம்மாள், முருகன் இவர்கள் மூவரும் தங்களது சொந்த பணி காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், மூவரின் வீடுகளில் புகுந்து நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 5000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பின்னர் மூவரும் பணி முடித்துவிட்டு இன்று காலை வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.