மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு...!

மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு...!

தருமபுரி மாவட்ட நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டு அடுக்கு கொண்ட குடியிருப்பு பகுதியில், இரண்டாவது அடுக்கிற்க்கு பீரோ ஒன்றை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த மின்சார வயர் பீரோவில் உரசியத்தில், மின்சாரம் தாக்கி இலியாஸ் பாஷா(75) , கோபி(23) என்ற இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பச்சையப்பன் (57) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.