திருச்சியில் மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி...!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில்,  திருச்சி மாவட்டத்தில் மூன்று பேருக்கு  டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க : மகளிர் உரிமை தொகை; 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்த மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.