டயர் வெடித்து விபத்து....தலைகுப்புற கவிழ்ந்த கார்...!

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஆவியூர் அருகே காரின் டயர் வெடித்ததால், கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து...இருவர் உயிரிழப்பு...

டயர் வெடித்து விபத்து....தலைகுப்புற கவிழ்ந்த கார்...!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து பணிமனையில்  நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதிக்கு காரில் திரும்பி உள்ளார்.

கார், விருதுநகர் அருகே உள்ள ஆவியூர் பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் பின்பக்க டயர் வெடித்து அருகில் இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் கார் ஓட்டி வந்த ஆனந்த் (32) மற்றும் அவரது தாய் மீனா (53) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் வந்த ஆனந்தின் மனைவி  உத்திர செல்வி (28) மற்றும்  உறவினர்கள் அய்யாதுரை, மாலா, யோகித் (8) ஆகிய நான்கு நபர்கள் பலத்த காயமடைந்து, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.