முகக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகள்...மாலை அணிவித்து பாராட்டிய போக்குவரத்து போலீசார்!!

முகக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகள்...மாலை அணிவித்து பாராட்டிய போக்குவரத்து போலீசார்!!

சென்னை பூந்தமல்லியில் முகக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை போரூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளில், போக்குவரத்து காவல்துறை சார்பில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது முகக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு மாலை அணிவித்த போக்குவரத்து போலீசார்,  பூச்செண்டு கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தினர்.