விடுமுறையை கொண்டாட குமரிக்கு படையெடுத்து சுற்றுலா பயணிகள்!

விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் கன்னியாகுமரி மாவட்டமே களை கட்டியுள்ளது.

விடுமுறையை கொண்டாட குமரிக்கு படையெடுத்து சுற்றுலா பயணிகள்!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறையை கொண்டாட வருகை தந்த சுற்றலா பயணிகள், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை இரு வேளைகளில் தங்கியிருந்து கண்டு களித்து செல்கின்றனர். குறிப்பாக  கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு படகு மூலம் சென்று பார்த்து ரசித்தனர். 

இதேபோல் கன்னியாகுமரி அருகேயுள்ள பழந்தோட்டம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க மீன் கண்காட்சியையும் மக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர். பெரிய பெரிய கண்ணாடிகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் கண்காட்சி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.