டிராக்டர் கவிழ்ந்து விபத்து...! விவசாயி பலி..!

திண்டிவனம் அருகே விவசாயத்திற்காக ஓட்டிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

டிராக்டர் கவிழ்ந்து விபத்து...! விவசாயி பலி..!

திண்டிவனம் அருகே விவசாயத்திற்காக ஓட்டிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அடுத்த காட்டுப் பூஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.
விவசாயியான இவர், இன்று விவசாய வேலையின் காரணமாக டிராக்டர் ஓட்டிக்கொண்டு அன்னம்பாக்கத்தில் இருந்து ஆவணிப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ட்ராக்டர் தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி  தகவலறிந்த ஒலக்கூர் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.