அரசு பேருந்து கண்ணாடியில் மோதி பரிதபமாக உயிரிழந்த மயில்...

செங்கம் அருகே வனப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்து கண்ணாடியில் மயில் மோதி உயிரிழந்தது.

அரசு பேருந்து கண்ணாடியில் மோதி பரிதபமாக உயிரிழந்த மயில்...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பண்ணை அருகே வனப்பகுதி இடையே உள்ளே தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து கண்ணாடியில் வனப்பகுதியில் இருந்து பறந்த நிலையில் சாலையை கடக்க முயன்ற மயில் திடீரென பேருந்து ஓட்டுனரின் முன்புறம் இருந்த கண்ணாடியில் தாமாக மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

மேலும் பேருந்தில் இருந்த கண்ணாடி உடைந்து பேருந்துக்குள் சிதறியது. பேருந்தில் இருந்த பயணியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.