மதுராந்தகம் அருகே 2 வேன்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து.. 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குளானது. இதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மதுராந்தகம் அருகே 2 வேன்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து.. 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில் வேன் ஒன்று வந்து கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது. பின் தொடந்து வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளான வாகனத்தின் மீது மோதி அந்த வேனும் கவிழ்ந்து விபத்துக்களானது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இரு வேன்களும் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இதில் பயணம் செய்த செய்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மதுராந்தகம்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன்களை மீட்பு போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.