எதிர்பாராத விதமாக லிப்டில் சிக்கிக் கொண்ட சிறுவன்.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்..!

எதிர்பாராத விதமாக லிப்டில் சிக்கிக் கொண்ட சிறுவன்.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்..!

காஞ்சிபுரம் அருகே லிப்டில் சிக்கிக் கொண்ட சிறுவனை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெருமாள் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றள்ளார். அப்போது சந்திரசேகரின் மகன் பிரவின்குமார் எதிர்பாராத விதமாக லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டார். பழுதாகி பாதியில் நின்ற லிப்ட்டில் இருந்து தனது தந்தைக்கு தொலைபேசியில் பிரவின்குமார் தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்த தீணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு லிப்டின் கதவை உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிக்கிக்கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.