தடுப்பூசி போட்டால்தான் பொது இடங்களில் அனுமதி... தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு...

பள்ளி, திரையரங்கு, மார்க்கெட் போன்ற இடங்களில் தடுப்பூசி போட்டவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று  தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

தடுப்பூசி போட்டால்தான் பொது இடங்களில் அனுமதி... தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு...

பள்ளி, திரையரங்கு, மார்க்கெட் போன்ற இடங்களில் தடுப்பூசி போட்டவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் காட்டி வருகிறது. தமிழகத்தில் வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தி அதிகமான மக்களுக்கு தடுப்பூசி  செலுத்தி வருகிறது.

தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாமை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி, திரையரங்கு, மார்க்கெட், கல்லூரிகள் போன்ற பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.