ஏரியில் மூழ்கிய 4 சிறுவர்களை பத்திரமாக மீட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஏரியில் மூழ்கிய 4 சிறுவர்களை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.

ஏரியில் மூழ்கிய 4 சிறுவர்களை பத்திரமாக மீட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கோட்டமருதூர் கிராமத்தை சேர்ந்த 7 வயது மாணவர்களான திலிப், பிரசாந்த், குணா, முனீஸ்வரன் ஆகிய நான்கு பேரும் கிராம எல்லையிலுள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், 4 பேரும் ஏரி கரையிலிருந்து கீழே இறங்கும் போது, கால் வழுக்கி ஏரியில் மூழ்கியுள்ளனர்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள், சிறுவர்கள் நீரில் மூழ்குவதை பார்த்து உடனடியாக ஏரியில் குதித்து சிறுவர்கள் நால்வரையும் மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்ட நால்வரில் இருவர் நலம் பெற்று வீடு திரும்பிய நிலையில் மீதமுள்ள இரண்டு சிறுவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்