மணிப்பூரில் மீண்டும் வன்முறை...! மேலும் 3 பேர் கொலை...!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை...!   மேலும்  3 பேர்  கொலை...!

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கில் 3 பேரை மர்ம நபர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் வன்முறையில் இறந்த 35 பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாட்டை அடுத்து வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

இன்னிலையில், நேற்று முன்தினம் இரவு பிஷ்ணுபூரில் உள்ள குவாக்டா பகுதியில் 3 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பிய நிலையில் அவர்களை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வாளால்  வெட்டியும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.  

சுராசந்த்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தின் கீழ் உள்ள குவாக்டாவின் கோதோல் பகுதியில் மீண்டும் கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அப்பகுதியில் அரசுப் படைகளுக்கும், குகி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

அப்போது,  என்கவுன்டரின் போது, ஒரு மணிப்பூர் கமாண்டோ, ’பௌனம் அப்பல்லோ (32) காயமடைந்தார்.

மேலும் ஒரு இளைஞரின் இடது முழங்காலில் இரண்டு குண்டு காயங்கள் ஏற்பட்டன. மேலும், ஒரு பெண்ணின் தொடையில் புல்லட் காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில் சுராசந்த்பூரில் பாதுகாப்பு படைக்கும், வன்முறையாளர்களுக்கும் மோதல் வெடித்ததில் போலீசார் உட்பட 3 பேர் காயமடைந்தது மீண்டும் அதிர்வலையை ஏர்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க   |  கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி தொடங்கியது...!