ஆட்டோ மீது வேன் மோதி 10 மாணவர்கள் காயம்!!!

விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் இரயில்வே கேட் அருகே ஷேர் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 10 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் காயமடைந்ததால், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்டோ மீது வேன் மோதி 10 மாணவர்கள் காயம்!!!

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டியிலிருந்து ஆவுடையார்புரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 10 பேர் ஷேர் ஆட்டோ ஒன்றில் இன்று காலை பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆவுடையாபுரம் இரயில்வே கேட்டை கடந்து  நாராயணா புளூமெட்டல்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே கார்மெண்ட்டிஸ்ஸில் வேலை பார்ப்பவர்களை ஏற்றிக் கொண்டு  வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இரண்டு வாகனங்களும்  நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 8 பேர் மாணவிகள் 2 பேர் ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் காயமடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வச்சக்காரபட்டி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் காயம் அடைந்த மாணவ மாணவியர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு  ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.