வாங்கிய கடன்களை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள், பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

வாங்கிய கடன்களை  பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெள்ளை அறிக்கை என்பது வழக்கமான நடைமுறை தான் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களும் கடன் பெற்றே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். மேலும் மின் சாதனங்களின் விலை உயர்ந்தும் கூட, கடந்த ஆட்சியில் மின்சார கட்டண விலை உயர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  
தொடர்ந்து பேசிய அவரிடம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுக மீது பற்று கொண்டவர் ராஜேந்திர பாலாஜி என்றும், வேண்டும் என்றே திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.