சாலைவிபத்து உயிரிழப்பை தடுக்க இன்னுயிர் காப்போம் திட்டம்... இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்...

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில், இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

சாலைவிபத்து உயிரிழப்பை தடுக்க இன்னுயிர் காப்போம் திட்டம்... இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்...

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5 ஆயிரம் ஊக்க தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக தமிழக அரசு முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதன்படி மேல்மருவத்தூரில், இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.