கும்பகோணம் அருகே பாஜக நிர்வாகி வீட்டில்.... ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்....!

கும்பகோணம் அருகே பாஜக நிர்வாகி வீட்டில்.... ஆயுதங்கள்,  வெடிபொருட்கள் பறிமுதல்....!

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ள இவர் மீது, 2016-ல் மருதாநல்லூர் மதன் சக்கரவர்த்தி கொலைவழக்கு,  2017ல் தாராசுரம் சிவானந்தம் கொலை வழக்கு,  2022ல் 2 கொலை முயற்சி வழக்கு  உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதால் நாச்சியார் கோவில் மற்றும் கும்பகோணம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் ரவுடி பெயர் பட்டியலில் உள்ளார்.

இந்நிலையில் கருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம், கார்த்திகேயன் வீட்டிற்கு பின்புறம் உள்ளது. அந்த 10ஆயிரம் சதுர அடி நிலத்தை தனக்கு இலவசமாக எழுதிதர வேண்டும் என சிவகுமாரை மிரட்டியதாகக்  கூறப்படுகிறது. 

இது தொடர்பாக சிவக்குமார்,  கடந்த 26-ம் தேதி நாச்சியார் கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் 15க்கும் மேற்பட்ட போலீசார் கார்த்திகேயன் வீட்டுக்கு  சென்றனர்.

இதையும் படிக்க      } சந்திரயான் - 3 செயற்கைக்கோள்,... இந்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்...! - இஸ்ரோ .

அப்போது போலீஸ் வருவதைக்  கண்டு கார்த்திகேயன் தப்பியோடியது தெரிய வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், அவரது வீட்டில் வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வீடியோ கேமராவின் பதிவுகளை பார்க்க பயன்படும் டி.வி. ஆர் கண்ட்ரோல் யூனிட் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க      } கனிமவளங்களைத் தொடர்ந்து...! கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் பொருட்கள்....!