ஆளுநரின் பேச்சில் என்ன தவறு இருக்கிறது? பிரிவினை விச செடி திமுக - அண்ணாமலை

ஆளுநர் தமிழ்நாட்டை நாம் தமிழகம் என்றே அழைக்கலாம் எனகூறியது சர்ச்சையில் சிக்கியது

ஆளுநரின் பேச்சில் என்ன தவறு இருக்கிறது? பிரிவினை விச செடி திமுக - அண்ணாமலை

அண்ணாமலை ட்வீட்டர் பதிவு

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்? 

சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது மாண்புமிகு தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை.  

1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது

இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர்

மேலும் படிக்க | புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் அமர்ந்த அமைச்சர் உதயநிதி

திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் 
@arivalayam
 கட்சியினருக்கு 
@rajbhavan_tn
 அவர்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?

வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது