முன்னாள்காதல் தொடர்பான முன்விரோதம்: பெண்ணின் தாய்மாமவை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த 3 பேர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காதல் தொடர்பான முன்விரோதத்தில் பெண்ணின் உறவினரை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள்காதல் தொடர்பான முன்விரோதம்: பெண்ணின் தாய்மாமவை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த 3 பேர் கைது!

காட்டூரைச் சேர்ந்த திவ்யா என்பவரும் கண்ணன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கண்ணனின் நடவடிக்கைகள் சரியில்லாததால் கடந்த 2009-ம் ஆண்டு திவ்யாவை அவரது அத்தை மகன் யுவராஜுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.  

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அவ்வப்போது யுவராஜுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று அவர் யுவராஜை தாக்கியதாகத் தெரிகிறது.  

இது குறித்து முறையிடச் சென்ற  திவ்யாவின் தாய்மாமா ஜீவானந்தத்தை கண்ணனின் அண்ணன் முத்து உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ஜீவானந்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் கொலை தொடர்பாக முத்து, நித்தியானந்தம், ராஜேஷ்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.