மதுராந்தகத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்!!

மதுராந்தகத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வெளிமாநில ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுராந்தகத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்!!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம் பேட்டையில் தனியார் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது, எதிர்த்து கேள்வி கேட்கும் தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்துவது என பல்வேறு பிரச்சனைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் புதிதாக வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கண்டித்தும், ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.