பிரபல ஓட்டல் சிக்கன் பிரியாணியில் புழு... கவுண்டமணி பாணியில் பேசிய மேலாளர்...

ஓசூர் அருகே பிரபல உணவகத்தில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியில் புழுக்கள் கிடந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல ஓட்டல் சிக்கன் பிரியாணியில் புழு... கவுண்டமணி பாணியில் பேசிய மேலாளர்...

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னார் பகுதியில் உள்ள தனியார் உணவத்தில், சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த மூர்த்தி, அருண், ராமச்சந்திரன், அருள் ஆகியோர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அதில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உணவக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். கத்திரிக்காயில் இருந்து புழு வந்திருக்கலாம் என அவர்கள் அலட்சியமாக பதில் கூற, வாடிக்கையாளர்கள் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தொலைபேசி வாயிலாக பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு உணவக ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த மேலாளர், பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா? என்றும், சாப்பிட்டு விட்டு செல்லுமாறும் கூறியுள்ளார். எனவே அலட்சியம் காட்டும் பிரபல உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.