எங்களை கேட்க நீ யார்...தலைக்கேறிய போதையில் பெண் காவலரிடன் தகராறு செய்த இளைஞர்கள்...தட்டி தூக்கிய போலீஸ்...!

திருப்பூர் அருகே பெண் காவலரிடம் மது போதையில் தகராறு செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

எங்களை கேட்க நீ யார்...தலைக்கேறிய போதையில் பெண் காவலரிடன் தகராறு செய்த இளைஞர்கள்...தட்டி தூக்கிய போலீஸ்...!

திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் தலைமை காவலர் நேற்றிரவு பவானி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்த 4 இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்களை எச்சரித்த பெண் காவலர் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் எங்களை கேட்க நீ யார் என கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து பெண் காவலர் வடக்கு காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்த போலீசார் 4 பேரையும் எச்சரித்து அனுப்ப முயன்றனர். அப்போதும் இளைஞர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.