பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் கைது...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 15 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் கைது...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவி. இவர் காந்தி நகர் பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 21 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் மாணவி குறித்து பல இடங்களில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ,இது தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் பொன்னேரி அடுத்த குரும்பர் வட்டம் பகுதியை சேர்ந்த கனரக வாகன ஓட்டுநரான விஜய் என்பர் தான் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது.

பின்னர் விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், மாணவி கடத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.