விதிகளை மீறும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை!

விதிகளை மீறி பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். 

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கணேசன் ஆறுதல் கூறினர். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கணேசன், உயிரிழந்த குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு படிப்புச் செலவுகள் அனைத்தையும் அரசே மேற்கொள்ளும் எனவும், வீடு மற்றும் இலவச பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு படிப்புச் செலவுகள் அரசே மேற்கொள்ளும்.