அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர்...! விஜய் வசந்த் பேட்டி...!!

அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர்...! விஜய் வசந்த் பேட்டி...!!

அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர் என திமுக சொத்துப் பட்டியல் தொடர்பான கேள்விக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார்.

வடசென்னை கிழக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பொன்னேரி தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த இஃதார் நோன்பு நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இஸ்லாமியர்கள் பொதுமக்கள் மற்றும் தோழமைக் கட்சிகளான திமுக  கம்யூனிஸ்ட் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் நோன்பு மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு மதசார்பற்ற கட்சி எனவும் அனைவரும் இன்று போல் என்றுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதற்கு எதுவும் இல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார் என விமர்சித்த அவர், அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பேசிய திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், வெவ்வேறு சமயத்தை சார்ந்தவர்களும் வெவ்வேறு ஜாதிகளை சார்ந்தவர்களும் யாராக இருந்தாலும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும் அதுதான் இந்த நாட்டிற்கு நல்லது  என அறிவுறுத்திய அவர் மத சார்பற்ற கொள்கைதான் இந்த நாட்டினுடைய கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:திமுகவுக்கு கொள்கையும், கூட்டணியும் ஒன்றுதான்...!! உதயநிதி ஸ்டாலின்...!!