"முதலமைச்சர் ராமேஸ்வரத்தில் நீராடி பாவத்தை கழுவிக்கொள்ள வேண்டும்" அண்ணாமலை காட்டம்!!

"முதலமைச்சர் ராமேஸ்வரத்தில் நீராடி பாவத்தை கழுவிக்கொள்ள வேண்டும்" அண்ணாமலை காட்டம்!!

பாஜக யாத்திரையை பாவ யாத்திரை என்று சொல்லும் முதலமைச்சர் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டு தங்கள் பாவங்களை கழுவிக் கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். 

"என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கோவில்வாடியில் உள்ள மீனவர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அவை விரைவில் தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அப்பொழுது, பாஜக யாத்திரையை பாவ யாத்திரை என விமர்சித்த முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டு, முதலமைச்சர் மு க ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் புன்னிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் நீராடி பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

குடும்பக் கட்சி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினும் அவரது மகனும் பதற்றமடைவது ஏன் என்றும் வினவியுள்ளார்.

இதையும் படிக்க || மீண்டும் இணையும் பா.ரஞ்சித் மற்றும் அட்டகத்தி தினேஷ்!!