உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேலும் ஒரு மனு!

உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேலும் ஒரு மனு!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

சுதந்திரத்திற்காக போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.  

ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. 

இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.