முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட பள்ளி: மாணவர்கள் தவிப்பு!

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட பள்ளி: மாணவர்கள் தவிப்பு!

திண்டிவனம்: அரசு நிதியுதவி பெரும் பள்ளியை, முன்னறிவிப்பின்றி இழுத்து மூடியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திண்டிவனம் நேரு வீதியில் அரசு உதவி பெறும் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் .
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பள்ளியை எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி பள்ளியில் போதுமான அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லை எனக் கூறி மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் பள்ளியை இன்று காலை திடீரென்று  மூடி உள்ளனர்.

மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. இதனால் இன்று திண்டிவனத்தில் இயங்கி வருகின்ற தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பள்ளியின் ஆசிரியர்கள், தாளாளர்கள்,ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர்  திடீரென்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தால் குற்றம் சாட்டப்படும் வட்டார கல்வி அலுவலர் பெலிக்ஸ் ஆகிய இருதரப்பினரிடமும் விசாரணை செய்து வருகின்றார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளியை முன் அறிவிப்பின்றி அதிகாரிகள் திடீரென்று
 மூடியதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.