லாரி மீது பாம்பை வீசிய சிறுவர்கள்: விழுந்தராட்சத உருளையில் பேருந்து மோதி 30 பேர் படுகாயமடைந்த கொடூரம்...

சென்னை- திருச்சி சாலையில் பேரங்கியூரில் சிறுவர்கள் இறந்த பாம்பை தூக்கி வீசியதால் வாகனங்கள் தொடந்து விபத்துக்குள்ளனதால் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மீது பாம்பை வீசிய சிறுவர்கள்: விழுந்தராட்சத உருளையில் பேருந்து மோதி 30 பேர் படுகாயமடைந்த கொடூரம்...

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அரசூர் அடுத்த உள்ள பேரங்கியூர் அருகே கோவைக்கு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி மீது சிறுவர்கள் பாம்பை வீசியதால் நிலைகுலைந்த லாரி ஓட்டுநர் சுப்பிரமணி பிரேக் பிடித்துள்ளார். இதனால் லாரியில் இருந்து விழுந்தராட்சத உருளையில் அரசுப் பேருந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியது. 

மேலும் அரசுப் பேருந்து இரும்புக் கடை மீது மோதி, சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 30 பேர் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். சிறுவர்களின் விபரீத விளையாட்டால் விழுப்புரம் சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.