மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை !

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக வரும் 14ஆம் தேதி அன்று  கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை !

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக வரும் 14ஆம் தேதி அன்று  கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் 14-ம் தேதி அன்று நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா பரிசோதனை, பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதுகாப்பான குழாய் குடிநீர் வழங்குதல், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கற்றல் - கற்பித்தல் பணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.