நெல்லையில் ஈழக் காசு கண்டெடுப்பு!

நெல்லையில் ஈழக் காசு கண்டெடுப்பு!

 சமணர் படுக்கையில் ராஜ ராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஈழ காசு கண்டெடுப்பு அகழ்வாராய்ச்சி நடத்த கோரி சமூக ஆர்வலர் ஆட்சியிடம் வலியுறுத்தினார்.

நெல்லை சிங்கி குளம் பகுதியில் உள்ள சமணர் படுக்கையில் கிபி பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஈழ காசுகள் கண்டெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கண்டெடுத்த ஈழக் காசுகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் நேரில் வழங்கினார்.

 மேலும் தொடர்ந்து சிங்கிகுளம் சமணர் படுக்கையில் அகழ்வாராய்ச்சி நடத்தினால் மேலும் பல்வேறு பழங்காலத்து பொருட்கள் கிடைக்கும் எனவும் ஆட்சியரிடம் வலியுறுத்தினார். இது குறித்து சமூக ஆர்வலர் தெரிவிக்கும் போது சிங்கி குளம் சமணர் படுக்கையில் பெரிய குகை இருக்கிறது இதில் பழங்காலத்து நாணயம் கிடைத்தது. இவை 10ம் நூற்றாண்டை ராஜ ராஜ சோழன் காலத்தை சேர்ந்தவை இந்த நாணயங்கள் இலங்கைக்காக அடிக்கப்பட்டவை. எனவே இதன் மூலம் இலங்கைக்கும் நமக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்றது தெளிவாக தெரிந்துள்ளது.

ஆதிச்ச நல்லூர் போன்று சிங்கி குளத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும்.  இந்த நாணயங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது ஆட்சியர் நாணயங்களை கண்டவுடன் சந்தோஷப்பட்டார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை இது போன்ற சோழர் காலத்து நாணயங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.