"போனஸ் வழங்குவதில் தமிழ்நாடு அரசு பாரபட்சம்" எடப்பாடி பழனிசாமி!

தீபாவளி போனஸ் வழங்குவதில், திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் வலியுறுத்தலின் பேரில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். 

மேலும், திமுக அரசு, கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 10 சதவீதம் போனஸ் அறிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

இதனை சுட்டிக்காட்டி தீபாவளி போனஸ் வழங்குவதில், ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று திமுக அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.