மீன் விலை சரிவு…கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!

மீன்பிடி தொழிலில் சுமார் பத்தாயிரம் மீனவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மீன் விலை சரிவு…கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை ஆகிய மீனவ கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் உள்ளது.

பத்தாயிரம் மீனவர்கள்

மீன்பிடி தொழிலில் சுமார் பத்தாயிரம் மீனவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் புரட்டாசி விரதம் மேற்கொள்வதால் ஒரு மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால் மீன் விலை வீழ்ச்சி அடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வரும் கூலிக்கு கூட மீன்கள் விலை போகாததால் மீனவர்கள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

பெரும்பாலான மீனவர்கள் விலை வீழ்ச்சியால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதனால் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.