இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்கு...சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்கு...சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

போக்குவரத்து கழகங்களில் பணியை முறையாக செய்யாமல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை மறுப்பு

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில்  நடத்துனராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், பணி நீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அணுகிய போது ஆணையர் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம் இந்த விவாகரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், போக்குவரத்து கழகங்களில் ஊழல் உள்ளிட்ட சில காரணங்களால் தவறிழைக்கும் ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இது போன்ற விவகாரங்களில் அதிகாரிகள் உரிய முறையில் பணிகளை செய்யாததால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்த நீதிபதி, தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.