ரூ.16400-க்கு ஏலம் போன ஒரு கிலோ டீ தூள்

குன்னூரில் தனியார் தொழிற்சாலையில் ஒரு கிலோ தேயிலை தூள் ரூ.16 ஆயிரத்து 400க்கு ஏலம் போனது.

ரூ.16400-க்கு ஏலம் போன ஒரு கிலோ டீ தூள்

குன்னூரில் தனியார் தொழிற்சாலையில் ஒரு கிலோ தேயிலை தூள் ரூ.16 ஆயிரத்து 400க்கு ஏலம் போனது.

சர்வதேச தேயிலை ஏலம் நேற்று ஆன்லைன் மூலமாக நடந்தது. இதில், குன்னூரில் உள்ள சி.டி.டி.ஏ. ஏல மையத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகளின் சிறப்பு தேயிலை தூள்கள் கொண்டுவரப்பட்டது. இந்த ஏலத்திற்கு குன்னூர் பில்லிமலை எஸ்டேட்டில் உள்ள அவிட்டா நிறுவனத்தின் சில்வர் டிப்ஸ் எனப்படும் ஒயிட் டீ கொண்டு வந்திருந்தனர். இந்த சிறப்பு தேயிலை தூள் அதிகபட்சமாக ரூ.16,400-க்கு ஏலம் போனது. இது தென்னிந்திய அளவில் அதிகபட்சமாக கிடைத்துள்ள விலை ஆகும். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தேயிலையில் இருந்து 5 கிலோ வரை மட்டுமே தூள் கிடைக்கும்.

இதில், நுனி பசுந்தேயிலையின் மூலம் ஒரு கிலோ சில்வர் டிப்ஸ் டீ கிடைக்கிறது. வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இதை ஏலம் எடுத்துள்ளனர். இந்த ஏலத்தில் மொத்தம் 4 கிலோ சில்வர் டிப்ஸ் டீ ஏலம் போனது. இது மட்டுமல்லாமல் மற்ற சில தொழிற்சாலைகளின் இலை ரகம், டஸ்ட் ரகம் தேயிலை தூள்களுக்கும் அதிக விலை கிடைத்தது.