"சாராய அமைச்சர் சரக்கு அடிச்சுட்டு பேசியிருப்பார் போல", ..... அசால்ட்  காட்டும் அண்ணாமலை..!

"சாராய அமைச்சர் சரக்கு அடிச்சுட்டு பேசியிருப்பார் போல", ..... அசால்ட்  காட்டும் அண்ணாமலை..!

 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை, "சாராய அமைச்சர் சரக்கு போட்டு பேசியிருப்பார்  போல',  எனக் விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி விமான  நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் அண்ணாமலையின்  ரபேல் வாட்ச்   சீரியல் நம்பர் மாறியிருக்கிறது என  அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்ததை சுட்டிக்காட்டி செய்தாயாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு  பதிலளித்த அண்ணாமலை," சாராய அமைச்சர் சரக்கு அடித்து விட்டு பேசியிருப்பார்", என கிண்டலாக   பதிலளித்தார்.   

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து , அக்கட்சியினர் செய்த ஊழல்கள் குறித்தும் முறைகேடுகள் குறித்தும் தெரிவிக்கும் வகையில் அவர்களின்  ஊழல்  பட்டியலை பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை அம்பலப்படுத்தினார். 

இதையும் படிக்க | அண்ணாமலைக்கு திமுக திடீர் நோட்டிஸ்...! அவதூறு செய்ய முயற்சிக்கிறார்.... -ஆர். எஸ். பாரதி.

இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் குறித்து அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் சீரியல் நம்பர் 149 என்று சொன்னதாகவும் தற்போது அதன் சீரியல் நம்பரை 147 என கூறியதாகவும்  விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அது குறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, அதற்கு ," சாராய அமைச்சர் சரக்கு கிரக்கு ஏதும் அடிச்சுட்டு பேசியிருப்பார் போல", என கிண்டலாக பதிலளித்தார். மேலும், தான் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் வியாதிருப்ப்தசாகவும் இன்னும் அதாற்கு யாரும் உரிய பதிலளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

 அமைச்சர் சசெந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என ஏற்கனவே விமர்சித்து வந்த அண்ணாமலை  தற்போது அவரை சரக்கு அடித்துவிட்டுட்டு பேசுகிறார் எனக்கு  குறிப்பிட்டது, பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. 

இதையும் படிக்க | கூட்டணி வேறு - கொள்கை வேறு - இபிஎஸ்