சென்னையில் பரவலான மழை!!

சென்னையில் பரவலான மழை!!

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் வரும் 12 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலை, எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா நகர், ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், தியாகராயர் நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில், செட்டிப்புண்ணியம், புலிப்பாக்கம், காந்தலூர், திம்மாவரம் உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் கடும் குளிர் காற்று வீசி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மதுராந்தகம், கருங்குழி , மாமண்டூர் ,படாளம் ,வேடந்தாங்கல், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், தொழுப்பேடு,மொறப்பாக்கம், எல்.எண்டத்தூர், ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பெருங்களத்தூர், இரும்புலியூர், பல்லாவரம், சேலையூர் சிட்லபாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க: குட்டிகளை தோளில் சுமந்து தாய் கரடி சாலையில் உலா... பொதுமக்கள் அச்சம்!!