அரசு மணல் குவாரி‌ அமைக்க எதிர்ப்பு…மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

அரசு மணல் குவாரி‌ அமைக்க எதிர்ப்பு…மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே  ஆனைக்குளம் குண்டாற்றுப் படுகையில் அரசு  மணல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி  அப்பகுதி கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 குவாரி அமைக்க எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா ஆனைக்குளம் கிராமம் அருகில் குண்டாறு செல்கிறது. இந்த குண்டாற்றில் இருந்து ஆனைக்குளம் அன்னலட்சுமிபுரம், நடுவபச்சேரி செங்கமடை தாமோதரபுரம், நத்தகுளம் உள்ளிட்ட 11 கிராமங்களில் இதன் மூலம் சுமார் 200 ஏக்கர்  விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது குண்டாற்றில் மணல் குவாரி அமைக்கப்பட‌ உள்ளது.

 ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இவ்விடத்தில் குவாரி அமைந்தால் பல கிராமங்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும்,  ஆகவே ஆனைக்குளம் குண்டாற்றில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி  வேண்டும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  அக்கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் காவல்துறையினர் தலையிட்டு சமரசம் செய்ததால், ஊர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.