ஓடு..ஓடு இங்கெல்லாம் சாகக்கூடாது… தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை விரட்டிய பொதுமக்கள்…  

சென்னையில் ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் துரத்தியதால் அவர்கள் தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஓடு..ஓடு இங்கெல்லாம் சாகக்கூடாது… தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை விரட்டிய பொதுமக்கள்…   

சென்னையில் ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் துரத்தியதால் அவர்கள் தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலம் அருகே நேற்று மாலை காதல் ஜோடி ஒன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அப்பாலத்தின் கீழுள்ள ரயில் தண்டவாளத்தில் காதல் ஜோடி சென்று படுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் கூச்சலிடவே அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் அனைவரும் கூச்சலிட்டு அவர்களை துரத்தினர். இதனால் பதற்றம் அடைந்த காதல் ஜோடி இருவரும் தண்டவாளத்தின் வழியாகவே அங்கிருந்து தப்பியோடி மறைந்தனர்.

இச்சம்பவத்தைக் காண பொதுமக்கள் கூடியதால் காந்தி இர்வின் பாலத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் காதல் ஜோடி யார் என்பது குறித்தும், அவர்களின் பிரச்சனைக்கான காரணம் குறித்தும் எழும்பூர் போலீசாரும், ரயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.