இன்னும் இரண்டாம் அலையே முடியலையா? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டாம் அலையே முடியலையா? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்டு வந்த கொரோனா பாதிப்பு, சற்று குறைந்தள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 519 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 458 ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 216 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் அதிகபட்சமாக 225 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.