பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் ஏறிய லாரி-சிசிடிவி காட்சி    

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் லாரி ஏறி இறங்கிய கோர விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் ஏறிய லாரி-சிசிடிவி காட்சி      

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் லாரி ஏறி இறங்கிய கோர விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இன்று காலை மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயலட்சுமியின் தலைமீது, பின்னால் வந்த லாரியின் முன்பக்க டயர் ஏறி இயங்கியது.

இதில் தலை நசுங்கிய நிலையில் ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது