இராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

தனுஷ்கோடியில் கடலில் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைக்க இந்திய, தமிழ்நாடு அரசுகள் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைத்தால் பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட மன்னர் வளைகுடா கடல் பகுதியாக உள்ளதால் அறிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசுவை, கடல் குதிரை  உள்ளிட்டவை அழியும்உயிரிழக்கக்கூடும் என்பதால் கடலில் காற்றாலை அமைக்கும்  திட்டத்தை கைவிடவும், அந்தத் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை 20 அன்று ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்று கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களையும் விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் கடலில் இறங்கி ஏ.ஐ.டி.யூ. சி மீனவ தொழிற்சங்கம்  சார்பில் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.