காதல் பிரச்சினையில் காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு?

காதல் பிரச்சினையில் காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு?

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26), இவர் பெருந்துறை உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இன்று மதியம் மூன்று மணிக்கு அவரது வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் பெருந்துறையில் இருந்து வரும்போது காதல் பிரச்சினை காரணமாக தன் மீது தனது காதலி (திருமணமான இளம்பெண்) ஆசிட் வீசிவிட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். தொடர்ந்து முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | கடந்த காலத்திற்கு சென்று நிகழ்காலத்துக்கு வந்திருக்கேன் - வைரமுத்து

பெண்ணின் பெயர் மற்றும் எந்த இடத்தில் சம்பவம் நடந்தது என்பதை பற்றி கார்த்திக் மருத்துவரிடம் கூறவில்லை.

கார்த்திக் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக ,‌ அவரிடம் பவானி போலீசார் விசாரணை நடத்த முடியவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பின்பு தான் அவர் மீது ஆசிட் வீசிய பெண்ணின் பெயர், எதற்காக வீசினார் மற்றும் எந்த இடத்தில் சம்பவம் நடைபெற்றது என்பது குறித்தான தகவல்கள் கிடைக்க பெறும் என பவானி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.