125 வகையா...?? மருமகனுக்காக உணவு சமைத்து அசத்திய மாமியார்...!

125 வகையா...?? மருமகனுக்காக உணவு சமைத்து அசத்திய மாமியார்...!

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா - சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ் - தனலட்சுமி தம்பதியின் மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9-ல் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் மாப்பிள்ளை சைதன்யா. அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தியுள்ளார் அவரது மாமியார். 

அவற்றை சாப்பிட முடியாமல் திணறிய மாப்பிள்ளை சைதன்யாவுக்கு, அதில் பல உணவு வகைகளின் பெயர் கூட தெரியாதாம். ஆனால், ருசியாக உள்ளது என வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். தற்போது இந்த உணவு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.