ஒரு கூடை மாம்பழத்தை 31,000-ரூபாய்க்கு ஏலம் எடுத்த வியாபாரி...ஏன்னு தெரியுமா?

ஒரு கூடை மாம்பழத்தை 31,000-ரூபாய்க்கு ஏலம் எடுத்த வியாபாரி...ஏன்னு தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கூடை மாம்பழம் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் உள்ள சந்தையில் நடைபெறும் ஏலத்தில், சுவை மிகுந்த ரத்னகிரி அல்போன்சா ரக மாம்பழம் உள்ள முதல் கூடையை வாங்க வியாபாரிகள் போட்டி போடுவார்கள். அது அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் என்று நம்பிக்கை. அதனால் முதல் கூடைக்கு ஏலம் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில்,. இந்த ஆண்டு முதல் கூடையை யுவராஜ் கச்சி என்பவர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறைதான் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போயிருப்பதாக மாம்பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.