”ராஜ்பவன் ஆர்.என்.ரவியே ! எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்?” போஸ்டரால் பரபரப்பு!

”ராஜ்பவன் ஆர்.என்.ரவியே ! எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்?” போஸ்டரால் பரபரப்பு!

பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சரின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கும் விதமாக பழனி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களும், அவர்கள் மேல் உள்ள வழக்குகள் குறித்த விபரங்களும் அடங்கியுள்ளது.

இதையும் படிக்க : "மகளிர் உரிமைத்தொகை - நடைமுறைக்கு வருமா?" - ஈபிஎஸ் கேள்வி!

மேலும், இதில் ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரை நீக்க நீங்கள் யார் ? என்று கேள்வி எழுப்பியும், டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களை மந்திரி பதிவிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய சொல் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் பழனி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.