அமிதாப் பச்சன் பங்களா இடிப்பு? மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சாலை விரிவாக்கத்திற்காக அமிதாப் பச்சன் பங்களா இடிக்கப்போவதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமிதாப் பச்சன் பங்களா இடிப்பு? மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சாலை விரிவாக்கத்திற்காக அமிதாப் பச்சன் பங்களா இடிக்கப்போவதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிரசித்தி பெற்ற பிரதீக்சா இல்லத்தின் ஒரு பகுதியை சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்போவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சந்த் தியானேஸ்வர் மார்க் சாலையில் அமைந்துள்ள அமிதாப் பச்சனின் வீட்டை இடிப்பதற்கு கடந்த 2017 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

பங்களாவின் எந்தப்பகுதி இடிக்கப்படும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப் பணிகள் அமிதாப் பங்களா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அதற்கான பணியை மும்பை மாநகராட்சி தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.