நான் கோமாவில் இல்லை; நிச்சயம் மீண்டும் வருவேன் - நித்தியானந்தா வெளியிட்ட பதிவு!

தான் கோமா நிலையில் இல்லை என்றும், நிச்சயமாக ஓரிரு நாட்களில் திரும்பி வருவேன் எனவும் நித்யானந்தா கூறியுள்ளார்.

நான் கோமாவில் இல்லை; நிச்சயம் மீண்டும் வருவேன் - நித்தியானந்தா வெளியிட்ட பதிவு!

பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, போலீசாரால் தேடப்பட்டு வருபவர் சாமியார் நித்யானந்தா. இவர் எங்கிருக்கிறார் என தேடப்பட்டு வந்த நிலையில்,  வெளிநாடு தப்பியோடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில்   வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம் என்றும், அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கோமா நிலையில் இல்லை என்றும், நிச்சயமாக ஓரிரு நாட்களில் திரும்பி வருவேன் எனவும் அவர் கூறியுள்ளார். நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பி வரும் நிலையில், அவர் இந்த பதிவை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.